book

திருவாசகம் திருவெம்பாவை

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. கதிரேசச் செட்டியார்
பதிப்பகம் :பெருமாய் புத்தகாலயம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2012
Add to Cart

பண்டிதமணிமு.கதிரேசச் செட்டியார்.அவர்கள்தலைசிறந்த தமிழ்மணி. நகரத்தார் மரபில் தோன்றிய பெருமணி. புலவர்க்கெல்லாம் புலவராய் விளங்கிய அறிவுமணி. இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியருள ஒப்பற்ற புகழ்மணி. பண்டிதமணி, மகிபாலன்பட்டியில் 16-10-1881ல் பிறந்தனர். கல்வியில் ஆராக்காதல்கொண்டு தமது சொந்த முயற்சியால் கணக்கற்ற நூல்களைத் தாமே கற்றனர். தென்மொழி, வடமொழியாகிய மொழிகளில் கற்றுத்துறை போகிய காரணத்தால் அறிஞரின் அன்பையும் மதிப்பையும் பெற்றனர். எம் சபையினரால் ‘பண்டிதமணி’ என்ற பட்டத்தையும், புலவர்பெருமக்களால் “முது பெரும் புலவர்” என்ற பட்டத்தையும், அரசினரால் “மகா மகோபாத்தியாயர்" என்ற அரிய பட்டத்தையும் பெற்றனர். திருவாசகம் தமிழகத்தின்தவநூல்; ஞானப் பனுவல்; பத்திப் பெருநூல்; தத்துவக் கருவூலம்; உணர்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த உயர்ஞான மொழிகள். அறிவாற் சிவனேயாய மணிவாசகரின் மணிமொழிகள்; காதலால் கசிந்து கண்ணீர் மல்கிய வாதவூரரின் வண்மைத் தமிழ்; ஆணவமல வெப்பத்தைத் தணிவிக்கும் தண்ணருள் நிறைந்த திருமொழி; பிறவிப் பெருநோய் தீர்க்கும் பெருமருந்து.