book

வாழ்க்கை வரலாறு வரிசையில் பசும்பொன் தேவர் திருமகனார்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கள்ளிப்பட்டி சு. குப்புசாமி
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

மனிதருள் மாமனிதராக வாழ்ந்த மாபெரும் தேசியத் தலைவர் ஆவார். “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்ˮ என்ற வரிகளுக்கு சொந்தக்காரன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.

ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தபோது விடுதலை வேட்கையோடு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கு படையை திரட்டி அனுப்பிய பெருமைக்குச் சொந்தக்காரன் ஆவார்.

பெயர்:முத்துராமலிங்கத் தேவர்
வேறு பெயர்:தெய்வத் திருமகன்
பிறப்பு:அக்டோபர் 30, 1908 (பசும்பொன்)
தந்தை:உக்கிரபாண்டி தேவர்
தாய்:இந்திராணி அம்மையார்
பணி:விவசாயம், அரசியல்வாதி
இறப்பு:30 அக்டோபர், 1963

தொடக்க வாழ்க்கை

1908 அக்டோபர் 30 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் எனும் கிராமத்தைச் சார்ந்த உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். ஐமீந்தரான உக்கிரபாண்டிக்கு இவர் ஒரே வாரிசாவார்.