book

சோபகளீஸின் ஆன்டிகனி

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. கவிதா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426563
Add to Cart

கிரேக்க நாடக இலக்கியங்களில் துன்பியல் நாடகங்களையே முன் மாதிரியாகக் கொண்டவர் சோயகளிஸ். இவர் கி.மு. 497-ல் பிறந்தார். நாடகத்தில் மூவர் நடிக்கும் பழக்கத்தை கொணர்ந்தார். அரிஸ்டாட்டிலால் பெரிதும் கவரப்பட்ட இவர் 132 நாடகங்களை இயற்றினார். அதில் தற்போது 7 துன்பியல் நாடகங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. மேற்கண்ட நாடகாசிரியர்கள் மட்டுமல்லாமல் மினாண்டர் (கி.மு. 342) குழுநிலை பாடல்கள் எழுதிப்புகழ் பெற்றார். இவரது நாடகங்கள் பிற்கால தெரன்சு, பிளாட்டசு, ஆர்கிலோன்சு, கொரிலியசு பிரின்சு போன்ற ரோமானிய நாடகாசிரியர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.

கிரேக்க நாடகாசிரியர்களான ஈஸ்கைலைஸ், யூரிபிடிஸ் அரிஸ்டோபெனிஸ், சோபகளீஸ் ஆகியோர்களின் மிகச் சிறந்த நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்கின்றன. இவற்றைப் பின்பற்றி தமிழ் மொழி பெயர்ப்புகளும் வந்துள்ளன. கிரேக்க நாடக வானில் சிறகடித்து வந்த துன்பியல் நாடகாசிரியர் சோபகளின்ஸ் நாடகங்கள் இன்றுவரை உலகம் முழுவதும் பேசப்படுகின்றன. சோபகனீசின் நாடகங்களை 18 நூற்றாண்டில் ஒரு சில ஆசிரியர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். அதன் பிறகு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு சோபகனீசின் ஏழு நாடகங்களான (பிலோக்டிடிஸ், ஈடிபஸ் மன்னன், ட்ராஸினியா, அஜாக்ஸ், எலக்ட்ரா, ஈடிபஸ் அட்கலோனஸ் ஆன்டிகனி) சமீபகாலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கிரேக்க, ஆங்கில மொழிகளை அறிந்திராத தமிழ் மொழியை மட்டும் அறிந்தவர்களும் ‘பெருந்திரள் வனப்பின் அரும் பெறல்’ இலக்கியமான கிரேக்க நாடகங்களை துய்த்துரைக்க வழிவகை செய்கின்றன.