book

தெரியுமா? தெரியுமே!

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாண்டுமாமா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :278
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List

ஆனந்த விகடன் இதழின்
ஓவியர் மாலி இவரை சிறுவர் கதைகளை எழுதத்
தூண்டினார். வாண்டுமாமா என்ற
புனைபெயரை இவருக்கு சூட்டியவரும் இவர்
தான். ஆனந்த விகடனில் இருந்து விலகிய
பின்னர் திருச்சியில் இருந்து வெளிவந்த
சிவாஜி என்ற பத்திரிகையின்
பொறுப்பாசிரியரானார்.
அவ்விதழின் சிறுவர் மலர் பகுதியில்
சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதினார்.
பின்னர் வானவில் என்ற மாதமிருமுறை
இதழிலும், கிண்கிணி என்ற குழந்தைகள்
இதழிலும் பணியாற்றினார். பின்னர்
கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை
ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற
குழந்தைகள் வார இதழைத்
தொடங்கினார்.
இக்காலகட்டத்திலேயே இவரது பெயர்
குழந்தைகளிடையே புகழ் பெறத்
தொடங்கியது. கோகுலம் பத்திரிகை
வெளியீடு நிறுத்தப்பட்ட பின்னர் 1984
ஆம் ஆண்டில் பூந்தளிர், "பூந்தளிர் அமர்
சித்திரக் கதைகள்" ஆகிய குழந்தைகள் இதழின்
ஆசிரியராகப் பணியாற்றினார். 1989
இல் இவ்வெளியீடுகள் நிறுத்தப்பட்டன.
பூந்தளிர் மீண்டும் 1990 இல்
வாண்டுமாமாவை ஆசிரியராகக்
கொண்டு வெளிவந்தது.