book

ஸ்ரீதியாகராஜ ராமாயணம்

₹14+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரசுவதி ராமநாதன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

ஞானிகள், புலவர்கள், கலைஞர்கள் என்று சமுதாய நலம்விரும்பிகள் தங்களுக்கிசைந்த ஊடகங்களின்மூலம் காலந்தோறும் தம்மைக் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். அவ்வகையில் பக்தியும் இசையும் கலந்த வெளிப்பாடாக தியாகராஜரின் வாழ்க்கை அமைகிறது. காகர்ல ராமப்ரஹ்மம்-சீதம்மா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்த அவருக்கு திருவாரூரில் உறையும் கடவுளான தியாகேசரின் பெயரையேகொண்டு காகர்ல தியாகப்ரஹ்மம் என்று பெயர் சூட்டினார்கள். இவரது தாய்மொழி தெலுங்கிலும், வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். இளவயதிலிருந்தே வால்மீகி ராமாயணத்தின் மீது பேரார்வம் கொண்டவர். தந்தை ராமனின் கதையை கதாகாலக்ஷேபம் செய்யும் போதும், தாய் புரந்தரதாசரின் பாடல்களைப் பாடும்போதும் தன்னை மறந்து அதில் லயித்துப்போகும் திர்யாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது. அவரது பாடல்களில் தியாகராஜ என்ற பெயரை முத்திரையாக பயன்படுத்தியிருக்கிறார்.