book

குருக்ஷேத்திரம்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ர.சு. நல்லபெருமாள்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :496
பதிப்பு :3
Published on :2005
Add to Cart

எந்த நாட்டிலும், யாராவது ஒரு சாரார், ஏதாவது ஒரு காரணத்தால் அந்தஸ்திலும், பொருளாதாரத்தி லும் உயர் மட்டத்தில் இருந்துகொண்டே தானிருப்பார்கள். இது தவிர்க்க முடியாத இயற்கையின் அமைப்பு. நாட்டு மக்களின் வறுமையைப் போக்குவதுதான் ஆட்சியின் கொள்கையாக இருக்க வேண்டும். வறுமையை கம்யூனிஸப் பாதையிலும் போக்கலாம். ஜனநாயகப் பாதை யிலும் போக்கலாம். ரஷ்யா, கம்யூனிஸப் பாதையில் செல் கிறது; ஜப்பான், முதலாளித்துவப் பாதையில் செல்கிறது. ரஷ்யா, தன் பாதையை அமைக்க இலட்சக்கணக்காகத் தன்னுடைய மக்களையே பலியிட்டுக் கொடுமைப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் எவ்விதக் கொடுமையும் புரியாமல், ஜப்பான், முதலாளித்துவப் பாதையில் முன்னேறி இருக்கிறது! இன்று இந்தியர்கள் சிந்திக்க வேண்டிய தெல்லாம் இதுதான். இந்திய மக்களை இலட்சக்கணக்கில் பலியிட்டு, கொடுமைப்படுத்தி, சுதந்திரத்தைப் பறித்து, பயங்கர ஆட்சியை ஏற்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் வறுமையை ஒட்டவேண்டுமா அல்லது செல்வந்தர்களாக சிலர் ஆவதைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய ஊக்கத் தைக் கொண்டே, ஜனநாயக வழியில், ஆக்க சக்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதன் மூலம் வறுமையை ஓட்ட வேண்டுமா என்பதைப்பற்றித்தான்.