book

இலங்கை + இந்தியா = இனப்படுகொலை

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. லெனின்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :28
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123425825
Out of Stock
Add to Alert List

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் நடந்த உள் நாட்டுச் சண்டையில், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். கொத்துக் குண்டுகளை எறிந்து, தமிழினத்தைக் கூண்டோடு அழித்த இலங்கை ராணுவத்தின் 'மனித உரிமை மீறலை' சர்வதேச நாடுகள் கண்டித்தன. 2009-ல் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இனப்படுகொலை குறித்த விசாரணை ஐ. நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்றுவருகிறது. அதில், 'சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு இலங்கையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்' என்று 2015-ம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தை இதுவரை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. அதுமட்டுமன்றி, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைக்க வழிவகைசெய்யப்படும்' என்ற தீர்மானத்தின் கால அவகாசமும் இந்த மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 34-வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், மறுவாழ்வு மற்றும் உரிமைகள் குறித்த தீர்மானத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோரும் தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டுவந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ் ஈழ ஆதரவாளர் என்ற முறையில் இயக்குநர் கௌதமனுக்கு ஐ.நா அழைப்பு விடுத்திருந்தது. ஐ.நா-வின் அழைப்பை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்றுள்ள கௌதமனை தொடர்புகொண்டு பேசினோம்.