book

தென்னகம் அரசும் சமூகமும்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.இரா. சங்கரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423845
Out of Stock
Add to Alert List

வரலாறு, வர்க்கச்சண்டைகளின் பதிவுகளே என்பதும், அது மாறிக்கொண்டிருப்பது என்பதும் நிதர்சனமானவை.  இவ்விரண்டிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம்.  தொழில்நுட்பம் ஒரு மக்கள்கூட்டத்தினை இரண்டாக உடைக்கும்.  தொழில்நுட்பம் கொண்ட சமூகம் ஆளும் வர்க்க மாகவும்,அல்லாத சமூகம்,ஆளப்படும் வர்க்க மாகவும் அமைகிறது. இப்போக்கு உலகம்முழுதும் வரலாற்றுச் சம்பவங்களாக நிகழ்கிறது. இதற்கு,இந்திய வரலாறும், இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் தமிழகத்தின் வரலாறும் விதிவிலக்கன்று.

உலக வரலாற்றின் பொதுப்போக் கோடுதான் தமிழகமும் இயங்கியுள்ளது. சிந்து நாகரிகம் கி.மு.மூவாயிரத்தில் பெர்சியப் பகுதி யுடன் வணிகவுறவு கொண்டிருந்தது. இது ஒரு வகையான உலகியல் போக்கு;இந்திய வரலாற்றில் ஒருகட்டம். இந்தியாவிற்குள் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு ஒரு சமூகவுறவினை உருவாக்கியது. அதனுடன் சில தொழில்நுட்பங்களும் வந்திருக்க வேண்டும்;இந்தோ-பாக்டிரிய இனம் உருவாக வழிவிட்டது. இது,இந்திய வரலாற்றின் அடுத்த கட்டம். மூன்றாம்கட்டமான குப்தர்காலத்தில் ஓர் அகன்ற பாரதத்தினை உருவாக்குதற்கு சமஸ்கிருதமும்,பிராமணப் பண்பாடும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.