book

தண்ணீர் தண்ணீர்

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :238
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427454
Add to Cart

உண்மைதான். ஒரு காலத்தில் கிராமங்களில் சிறுசுகளில் இருந்து பெருசுகள் வரை நீச்சல் தெரியாதவர்கள் இருந்ததில்லை. காரணம், ஆறு, ஏரி, கண்மாய், குளம், குட்டை, கிணறுகள்... என நீர் நிலைகளைச் சுற்றியே குடியிருப்புகள் இருந்தன. இன்றோ... 'விரிவாக்கம்' என்கிற பெயரில் நீர் நிலைகளெல்லாம் காணாமல் போய் விட்டன. நகரத்துவாசிகள் செயற்கைக் குளங்களில் மல்லாந்து கிடக்கிறார்கள். கிராமத்துச் சிறுவர்களுக்குத்தான் நீச்சல் பழக நீர் நிலைகள் இல்லாமல் போய் விட்டன. பத்து, இருபது ஆண்டுகளுக்குள்தான் இந்த தலைகீழ் மாற்றங்கள் உருவாகியுள்ளன.

'ஆறுகளில் குளித்த ஆனந்தக் குளியல், கிணறுகளில் மீன்களாய் துள்ளிக் குதித்து மகிழ்ந்த நாட்கள்... போன்றவை நாற்பது வயதைக் கடந்தவர்கள் நினைவுகளில் இன்றைக்கும் நிழலாடும். எங்கே போயிற்று அந்த ஆனந்தம்? நாம் அனுபவித்த அந்த ஆனந்த அனுபவத்தை நமது சந்ததிகள் அனுபவிக்க வேண்டாமா? ஓடும் நீரில், உடலை மிதக்கவிட்டு, மனச்சோர்வை மறக் கடிக்கும் மகிழ்ச்சியை அவர்களும் பெற வேண்டாமா?'