அதே நிலா சங்க இலக்கியக் கதைகள்
₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் புவியரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123424149
Add to Cartஇந்தக் காலக்கட்ட இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என வகுக்கப் படுகிறது. சங்க இலக்கியங்கள் துவக்ககால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள்.
இடைக்கால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள், [சங்கம் மருவிய காலம் என்றும் இக்காலக்கட்டம் அழைக்கப்படுகிறது] சிலப்பதிகாரம் முதல் துவங்குகிறது. ‘அறம் பிழைத்தோருக்கு கூற்றாகும்’ என்று அடைமொழி பெறும் சிலப்பதிகாரத்தின் பின்புல சமூக சூழலாக, மூவேந்தரின் முடி ஆட்சி காலம் அமையப்பெறுகிறது.
பின் களப்பிரர் காலம். அரசு ஆட்சி அமைப்புகள் மாறி,சமூக இணைவுக்கு அகிம்சையை முன்னெடுத்த மதங்கள், வலியுறுத்திய அற விழுமியங்களின் பின்புலத்தில் உருவாகி வந்த திருக்குறள் போன்றவை இக் காலக்கட்டம் சார்ந்தவை.
பிற்கால செவ்வியல் காலக்கட்ட இலக்கியம், தமிழ் நிலத்தில் பேரரசுகள் நிலைபெற்றுவிட்ட பின்னணியில் திரண்டு வந்த கம்ப ராமாயணம் என்ற ‘அறத்தின் மூர்த்தியான’ பிரதியை தங்கள் சிகரமுடியாகக் கொண்டு நிலைபெற்றவை.
இந்த மூன்று காலக்கட்டங்களையும் சேர்ந்த இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என்று வழங்கப்படுகிறது.
இடைக்கால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள், [சங்கம் மருவிய காலம் என்றும் இக்காலக்கட்டம் அழைக்கப்படுகிறது] சிலப்பதிகாரம் முதல் துவங்குகிறது. ‘அறம் பிழைத்தோருக்கு கூற்றாகும்’ என்று அடைமொழி பெறும் சிலப்பதிகாரத்தின் பின்புல சமூக சூழலாக, மூவேந்தரின் முடி ஆட்சி காலம் அமையப்பெறுகிறது.
பின் களப்பிரர் காலம். அரசு ஆட்சி அமைப்புகள் மாறி,சமூக இணைவுக்கு அகிம்சையை முன்னெடுத்த மதங்கள், வலியுறுத்திய அற விழுமியங்களின் பின்புலத்தில் உருவாகி வந்த திருக்குறள் போன்றவை இக் காலக்கட்டம் சார்ந்தவை.
பிற்கால செவ்வியல் காலக்கட்ட இலக்கியம், தமிழ் நிலத்தில் பேரரசுகள் நிலைபெற்றுவிட்ட பின்னணியில் திரண்டு வந்த கம்ப ராமாயணம் என்ற ‘அறத்தின் மூர்த்தியான’ பிரதியை தங்கள் சிகரமுடியாகக் கொண்டு நிலைபெற்றவை.
இந்த மூன்று காலக்கட்டங்களையும் சேர்ந்த இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என்று வழங்கப்படுகிறது.