'மனிதன் அல்லாத எவ்வுயிரினமும் இயல்பாக நோய்களையோ, பிரச்சனைகளையோ
தோற்றுவித்துக்கொண்டு அவதிப்படுவதில்லை, ஆனால் மனிதன் மட்டும் உணவாலும்,
உடலாலும், உள்ளத்தாலும், உறவாலும், உற்றாராலும், சூழலாலும், சமுதாயத்தாலும்
பலவிதப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். பிரச்சனைகள் வருவது இயல்பு. அதனை
உணர்வுப்பூர்வமாக எதிர்கொள்வது அறிவாளிகள் செயல்.பிரச்சனைகள் வருமுன்
காத்துக்கொள்வது புத்திசாலிகள் செயல். இவற்றையெல்லாம் மனதில்கொண்டு, சமுதாய
நலனில் நாட்டம் கொண்டு, தக்க வழிமுறைகளை இந்நூலில் நூலாசிரியர் ,
கட்டுரைகளாக்கி கனிவுறக் கொடுத்துள்ளார். நூலினூடே கல்வி, அறிவு, ஞானம்,
தியானம் இவற்றுக்கு அழகான உதாரணங்கொண்டு விளக்கியிருப்பதுடன் வாழ்வில்
வெற்றிக்குத் தேவை மனமாற்றம் என ஆணித்தரமாகக் கூறுகின்றார்.