அகமும் புறமும் *239 தித்தானே விளக்க முடியும்? அந்த முறையில் இந்த அகப் பொருள் நாடகங்களுள் வரும் பாத்திரங்களுள், கவிஞர் தம்மையே தலைவனுகவும், தல்ைவியாகவும், தோழியாகவும், செவிலியாகவும் கற்பனை செய்துகொண்டு பாடிய பாடல்கள் பலப்பல. அப்படித் தாமே அவையானல்தயன், கவிஞர் கவி பாட முடியும். அந்த வகையில் அகப்பொருட்கு உரியார் சிலர் பேசப்படுகின்றனர். அவருள் முக்கியமானவர் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்ருய் என்பவர். அவர்கள் வாயி லாகத்தான் தமிழில் உள்ள பல அகத்துறைப் பாடல்கள் தோன்றி வாழ்கின்றன. தொல்காப்பியத்தில் அவர்களைப் பற்றிய இலக்கணங்களையும் அவர்கள் பேசும் இடங்களையும், பிற இயல்புகளையும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.