தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் நவராத்திரியை முன்னிட்டு ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற புதிய நிகழ்ச்சி வரும் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இது ஒளிபரப்பாகிறது. பல்வேறு துறைகளின் பெண் சாதனையாளர்கள் பற்றிய சுவாரஸ்யமான, அரிய தகவல்கள், மறக்கமுடியாத நினைவுகள், சாதனைகள் ஆகியவற்றின் தொகுப்பாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் கதை ஆக்கம், எழுத்து பணிகளை சங்கர் வெங்கட்ராமன் கவனிக்கிறார். இவர் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குறையொன்றுமில்லை’ நிகழ்ச்சியின் எழுத்துப் பணிகளை மேற்கொண்டவர்.