வரலாற்று இயல் பொருள்முதல்வாதம் ; மாரிஸ் கார்ன்பார்த் என்பவர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின்
சித்தாந்தவாதியாக இருந்தவர். கிறிஸ்டோபர் காட்வெல், மாரிஸ்டாப் ஜார்ஸ்தாம்சன் ஆகியோரின் சமகாலத்தவர்.
அவரது அணுகுமுறை மார்க்சியத்தை மாற்றாமல் விளக்குவது என்பது மார்க்சிய வரலாற்றுக் கண்ணேட்டத்தில்
முக்கியமாகப் பேசப்படுவது அடிப்படையானது மேற்கோப்பைத் தீர்மானிக்கும் சக்தி உள்ளது என்பது ஆகும். இதைத்தான்
மார்க்ஸ் மனிதனது இருப்பு அவனது உணர்வைத் தீர்மானிக்கிறது என்ற புகழ்பெற்ற கூற்றின் மூலம்
வெளிப்படுத்தினார்.அதாவது மனிதனது எண்ணங்கள், சிந்தனைகள் யாவுமே அவன் சமூகத்தில் பொருள்
உற்பத்திக்காகக் கொள்ளும் உறவின் மூலமே உருவாகின்றன. தீர்மானிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையான கருத்தை
மனதில்கொண்டு மாரிஸ் கார்ன்பார்த் மார்க்சிய வரலாற்றுக் கொள்கையை இந்த நூலில் விளக்குகிறார். இந்த தூல்
ஓவ்வொரு கட்சி உறுப்பினரும் படிக்கவேண்டிய ஒன்று.
- பதிப்பகத்தார்.