பணம் சம்பாதிப்பதற்காக நாய், பேயாக, இரவு, பகலாக அலையும் நிறைய பேரை பார்த்திருப்போம். சிலரோ மிகவு் கடின உழைப்பால் செல்வத்தைப் பெருக்க நினைப்பார்கள். எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில் தங்குவதேயில்லை. அவர்களும் பணம் சேமிக்க என்னென்னவோ செய்து பார்த்தாலும் கைக்கு வருவது வாய்க்கு எட்டாமல் போய்விடுகிறது. அந்த லிஸ்ட்டில் நீங்களும் இருக்கிறீர்களா?... அப்போது உங்கள் வீட்டில் இதுபோன்ற சின்ன சின்ன மாற்றங்களைச் செய்யுங்கள். குபேரன் உங்கள் வீட்டில் செல்வ வளத்தை அள்ளி அள்ளி கொடுப்பாராம். அது ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.