நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவிட்டிருக்கும் அந்த் அடுத்த தினம் முதல் உடலுறவு சேர்க்கை என்பது ஞாபகம் ஈட்டுக் கொள்ளும் நிகழ்வாகாது. காரணம் அப்போதிலிருந்து அவர்கள் தம்பதிகள். சக்தியும் சிவமும் சேர்ந்து இயங்குவது தான் உலகம். என்பது நாம் அறிந்தது. உயிரை விட்டு உடல் இயங்குவதும் உடலை விட்டு உயிர் இயங்குவதும் இயலாது என்பதும் உயிரியல் அடிப்படை. உடல் வலு இழப்பை ஈடுசெய்ய இத்தகைய தம்பதியினரான ஓர் ஆண், எண்ணும் ஊட்ட சத்து மிக்க பாதாம், பிஸ்தா, அக்ரூட், சாரப்பருப்பு, வெள்ளரிவிதை, முந்திரி, பேரீச்சம் பழம், பூசணி விதை மற்றும் காய்கறிகள், கீரை வகைகளைச் சாப்பிடுவதன் மூலமாகவும், சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி ஆகிய முறைகளைச் சேர்ந்த தாதுபுஷ்டி லேகியம்,பற்பம் செந்தூரம் ஹல்வா, மாஜூன் போன்றவைகளை உட்கொண்டு வருவதன் வாயிலாகவும், மனதை அலைபாய விடாமல் அதனை முறைப்படுத்துவதன் பயனாகவும், தங்களின் உடலில் இழந்துள்ள பழைய ஆரோக்கியத்தைத் திரும்பப்பெறலாம்.