இன்று உலகம் முழுவதும் பிராணாயாமம், குண்டலினி எழுச்சி, வாசியோகம், தியானம் போன்றவற்றை இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் கற்றுத் தருகிறார்கள். அது எந்தளவுக்குச் சாத்தியமோ அடியேன் அறியேன். அறிந்தவரைப் பார்க்கும்போது முறையான பயிற்சிகள் சிலவற்றை அவர்கள் கொடுத்து வந்தாலும் அவை யாவும் 'பிரணவப் பொருளை' பிரம்ம கல்பமாக உட்கொண்ட பிறகே செய்ய வேண்டிய பயிற்சி முறைகளாகத் தெரிகிறது.