அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை ,அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது . என்று கூறும் ஓஷோ இந்நூல் மூலம் புத்தரின் கருத்துகளை ஒத்த அவரின் அனுபவ கருத்துகளை சொல்லிச் செல்லுகிறார். போகிற போக்கில் அவர் சொல்லிய கருத்துக்களை படித்தபின் அதைத் தாண்டி அடுத்த நிலைக்கு செல்லுவது. என்பது சுலபமாக இருக்கிறது .வாழ்கையை வேறு ஒரு கோணத்தில் நின்று அணுகிய அவரின் அனுபவம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.