தமிழ் திரைப்பட உலகிலும், இந்திய இலக்கிய உலகிலும் கவியரசர் கண்ணதாசனுக்குத் தனி இடம் உண்டு.
திரைப்படப்பாடல்கள் 7500 க்கும் மேல், தனிக்கவிதைகள் 5000க்கும் மேல், மற்றும் 195 தனி நூல்கள் எழுதி இறவாப் புகழ் பெற்றவர். சாதாரண மனிதனின் வாழ்க்கைக்கு, வழிகாட்டியாக இவரது திரை இசைப்பாடல்களும், நூல்களும் இன்றும் இருக்கிறது.
கவியரசரது மிகச்சிறந்த நூல்கள் வரிசையில் முதலில் வருவது “அர்த்தமுள்ள இந்து மதம்”.சேரமான் காதலி என்னும் சரித்திர நாவலிற்காக 'சாஹித்ய அகாடெமி விருது' பெற்றவர். அவரது பகவத்கீதை விளக்க உரை, கவிதை தொகுதிகள், திரை இசைப் பாடல் தொகுதிகள், அவரது வாழ்க்கை வரலாறான வனவாசம், மனவாசம், எனது சுயசரிதம், மற்றும் கவியரசரது அனைத்து நூல்களும் உங்களது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி.
அவரே சொன்னது போல் இன்றும் அவர் நிரந்தரம்.
“நான் நிரந்தமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”