"இராமன் வெற்றி பெற, பகைவன் இராவணனே இராமேஸ்வரத்தில் புரோகிதராக இருந்து வேள்வியை நடத்திக் கொடுத்தான் என்று இந்நூல் கூறுகிறது.
வேள்வி வெற்றி பெற வேள்வியை நடத்துபவனுடன் அவனது மனைவியும் இருக்க வேண்டியது அவசியம். எனவே வேள்வி முடியும் வரை சீதையை அழைத்து வந்து வேள்வியை முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் சீதையை இராவணன் அழைத்துச் சென்றான் என்றும் இந்நூல் கூறுகிறது."