தான் படைத்த உலகில் மனிதர்களின் செயல்களில் அதிருப்தி கொண்டு, இறுதியில் நோவாவுடன் சிங்கம், கரடி, ஓநாய், கொக்கு, ராபின், குருவி, வெட்டுக்கிளி வரை அனைத்து உயிரினங்களிலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜோடியைத் தேர்ந்தெடுத்து, நோவா செய்த கப்பலுக்குள் அனுப்பி, மிச்ச உயிரகள் அனைத்தையும் அழித்து உலகைப் புதுப்பிக்க முயன்ற கடவுளைப் போலவே, ஒவ்வொரு நாளும் என்னைச் சுற்றி நடக்கும் உயிர் செயல்களோடு தீவிரமாக வாழும் தூண்டுதலை மேற்கொள்ள விரும்பும் - கடவுளைப் போலவே - தினசரி என் உடல் அந்த முயற்சியில் வழுவித் தோற்கும் அடையாளமே என் கவிதைகள்.