நான் நாத்திகன் ஏன்? (Why i am an atheist) என்பது இந்திய புரட்சியாளர் பகத் சிங்கினால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தைக்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியுடன் 1931 இல் எழுதியக் கடிதமாகும். அக்கடிதத்தை பகத் சிங்கின் தந்தை லாகூரிலிருந்து வெளிவரும் ஜனங்கள் என்னும் ஆங்கில தினப் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார். பின்பு நூல் வடிவில் வெளியானது. பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி இக்கட்டுரையை எழுதினார்.