தரித்திரத் தத்துவத்தை அறியாமையின் காரணமாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிருர்கள். எழுத்தாளர்கள் இந்த அறியாமையைப் போக்கி அவர்களை விழிப்படையச் செய்ய முயற்சிக்க வேண்டும். மக்கள் கூட்டத்தின் மேல் மனிதாபிமானம் மிக்கவனுய்,மக்கள் மீது அன்பு கொண்டு, கருணை கொண்டு,இரக்கம் கொண்டு,மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனப் பாடுபட உறுதி பூண்டு பேன பிடிப்பவனே உண்மையான எழுத்தாளன்.