ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு எழுத்துத் துறையில் இன்றும் ஜீவகளையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் தாங்கள் இப்போது வந்திருக்கும் 'வெற்றித் திருநக'ராம் கோலாலம் பூரிலும், இன்னும் பல நகரங்களிலும் பண்பட்ட, வளர்ந்து வருகின்ற, 'புது வெள்ளம்'போல் விரைந்து உயர்கின்ற எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள், நாவலாசிரியர்கள் நல்ல எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்காகப் பேனாவை உயர்த்துகின்ற தங்களை வாழ்த்தி வரவேற்பதைப் பெருமை யாகவும் கருதுவோம்.