நிலக்கரி துறை செயலராக இருந்த பிசி பராக்கைச் சேர்த்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து இந்திய ஆட்சிப் பணித்துறை (ஐஏஎஸ்), இந்திய காவல் பணித் துறை (ஐபிஎஸ்), மற்றும் இந்திய வனப் பணித் துறை (ஐஎஃப்-ஒ-எஸ்) பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் சங்கங்கள் போர்க் கொடி தூக்கியிருக்கின்றன.
நேர்மையான அதிகாரிகள், “ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டார் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்ற தற்போதைய விதி திருத்தப்பட வேண்டும் என்று மத்திய ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் ஆர் பூஸ் ரெட்டி கூறியிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர், மத்திய ஊழியர் மற்றும் பயிற்சித் துறை செயலர், மத்திய அமைச்சரவை செயலர் தேவைப்பட்டால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை கூட சந்தித்து பேசப் போவதாகவும் கூறியிருக்கிறார்.