மிகப் பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பணம், அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தலைமை தாங்குவார்கள் என்பது பரவலான கருத்து. ஆனால் அவர்கள் ஆன்மிக அடிப்படையிலும் தலைமை தாங்க முடியும் என்பதை விளக்கும் நூல் இது. A leader is one who makes himself gradually unnecessary to his followers in the course of his leaderஷிப் _ என்று எப்போதோ படித்த நினைவு. இன்ஃபோசிஸில் தனக்கு நிர்வாக இயக்குநர் பதவி அளிக்கப்பட்டபோது அதை எவ்வாறு என்.எஸ்.ராகவன் நாசூக்காக மறுத்தார் என்பதைப் பேட்டிக் கட்டுரையில் படித்தபோது மேற்கூறியது நினைவுக்கு வந்தது. இதைப் போல அனேக சுவையான நிகழ்ச்சிகள். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் கட்டுரை நூலின் இறுதிப் பகுதியாக தொகுக்கப்பட்டிருப்பது மகுடத்தில் வைரக்கல். எளிமையான நடையில் கருத்துச் செரிவுள்ள அவருடைய கட்டுரை வெகுஜன வாசகர்கள் படிப்பதற்கு ஏற்றது. ‘Leading with Wisdom’ என்ற தலைப்பில் ‘சேஜ்’ பிரசுரம் வெளியிட்டிருக்கும் ஆங்கில நூலிலிருந்து 13 கட்டுரைகளை எளிமையான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் எஸ்.கோபால். இந்த நூலைப் படித்தவுடன், ‘ஆன்மிகத்தை இழைத்து வியாபாரத்தில் தலைமையா? ம்ஹும். நோ சான்ஸ்’ என்ற நெகடிவ் எண்ணம் மறைந்துவிடும். ‘ஆன்மிக அடிப்படையில் தலைமை தாங்குவது அப்படியன்றும் சிரமமானது இல்லை போலிருக்கிறதே’ என்ற ஆக்கபூர்வ எண்ணம் தோன்றும்.