‘‘ஆக, புதுசா ஒரு தொழில் ஆரம்பிக்க நெனச்சு இந்தப் புத்தகத்த வாங்கிட்டீங்க..!’’ ‘‘பின்னே... ஏற்கெனவே விவரம் தெரியாம ஒரு தொழில ஆரம்பிச்சு கைய சுட்டுக்கிட்டேன். இப்போ ‘தொடு, துலங்கும்!’னு இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே திரும்ப உற்சாகமாகி வாங்கிட்டேன்!’’ ‘‘நியாயமான உற்சாகம்தான்! படிச்சுப்பாருங்க... சுயதொழில் ஆரம்பிச்சு உங்க திறமைய வெளிப் படுத்தி, தொழில் போட்டியில நீங்க வெற்றிக் கொடிய பறக்க விடலாம்ங்கறதைப் புரிஞ்சுப்பீங்க! பண்டமாற்று முறையில் துவங்கி பங்குச் சந்தை வரை தொழில் வளர்ச்சியோட பரிணாமங்களையும், அடிப்படைக் காரணங்களையும் சுயதொழில் செய்ய தூண்டும் விதமா, தெளிவா எழுதியிருக்காரு பேராசிரியர் ஆர்.எஸ்.வீரவல்லி.’’ ‘‘என்ன தொழில் செய்தா நிறைய லாபம் கிடைக்கும்னு யோசிக்கிறேன். அதுக்குத் தகுந்த மாதிரியான வேலை ஆட்களைத் தேர்ந்தெடுக்க இந்தப் புத்தகத்துல வழி சொல்லியிருக்காரா?’’ ‘‘புதுசா தொழில் துவங்க நெனக்கிறவங்கள மனசுல வெச்சுத்தான் பல அடிப்படையான விஷயங்களையும் எழுதியிருக்காரு. எப்படிப்பட்ட திறமை உள்ளவங்கள வேலைக்கு எடுக்கணும், எப்படிப்பட்ட திட்டங்கள வகுக்கணும், மார்க்கெட்டிங் சர்வே எப்படிப் பண்ணனும் என்பதைப் பற்றியும்.