மனிதனுக்கு இறப்பு ஏற்படுவது அவனது கவனக் குறைவால்தான் ஏற்படுகின்றதே அன்றி தானே விளைவதன்று என்பது இராமலிங்க அடிகளாரின் கருத்து. மனிதன் சாகாமல் இருக்க அவன் முதலில் சமய, மதங்களில் இருந்து விடுபட வேண்டும். ஆன்ம நேய ஒருமைப் பாட்டுணர்வைப் பெறவேண்டும். சமயம்,மதம் ஆகிய தளைகளில் இருந்து விடுபட்டால்தான் மனிதனால் மரணத்தை வெல்ல முடியும்.