நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்களால் உருவாக்கப்பட்ட வைத்திய முறைகளுள் ஒன்று வர்மக்கலை. இந்த வர்மக்கலை பற்றி அறிந்து கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆனால் இதற்குத் தமழில் போதிய நூல்கள் வெளிவரவில்லை. இக்கலையைப் பற்றி ஓரளவுக்கு நன்கு தெரிந்து கொள்வதற்கேற்ற வகையில் இந்நூலை திரு.மானோஸ் அவர்கள் சிறப்பாக உருவாக்கியுள்ளார். பலருக்கும் பயன்படும் வகையில் பல அரிய விவரங்களையெல்லாம் திரட்டித் தொகுத்து , இந்நூலை உருவாக்கியுள்ள, திரு .மானோஸ் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு , இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்