இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய கலைகளைக் கற்றுக்கொண்டார்.
இந்தியன் திரைப்படத்தின் வாயிலாகக் வர்மக் கலை சொல்லிய வர்மக் கலை தலைமை ஆசான் இராஜேந்திரன் வாயிலாக பல வர்மக் கலை நுணுக்கங்களைப் பயின்றார்.
கொல்லி மலை, சதுரகிரி மலை, வள்ளி மலை போன்ற இடங்களுக்குச் சென்று அபூர்வமான கற்பக மூலிகைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு உயிர் வர்மா சிகிச்சை எனும் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார்.
மேலும் வர்மகலை, யோகாசன பயற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
தான் பெற்ற அனுபவத்தின் மூலமாகவும், அநேக புத்தகங்களின் ஆய்வின் மூலமும் கிடைத்த பல அரிய விஈயங்களை இப்புத்தகத்தில்தெளிவாக விளக்கியுள்ளார்.
வாசகர்களுக்கு இது பயனுள்ள ஒரு பொக்கிஷமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
இது ஒரு கற்பகம் புத்தகாலயம் வெளியீடு