முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது.
உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' சென்று மின்னும். அகத்தூய்மைதான் ஆனந்த வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது. அப்படிப்பட்ட அகமாகிய உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள, தானதர்மம், தார்மீகம், அன்பு, கருணை , இரக்கம் எளிய வருக்கு உதவும் மனோபாவம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வது இன்றியமையாத தாகிறது. இதை எல்லாம் மனதில் வளர்த்துக்கொண்டு பின்பற்றினால், அடுத்தவர்களை எளிதில் ஈர்த்து விடலாம். முகத்தில் 'லட்சுமி கடாட்சம் குடி கொள்ளும். நம்மை ஒரு முறை பார்த்தவர்களைக் கூட மறுமுறை பார்க்க தூண்டும் காந்த ஈர்ப்புப் பெற முடிஇயும். இது தான் வசியத்தின் மூல ஆதாரம். வசியம் என்பது , இறைவனை நினைத்து மந்திர அட்சரங்களை ஓதி, தனக்குத்தானே நலன்களை செய்துக்கொள்ள கூடிய கர்மபிரயோகமாகும். இந்த வசியம் செய்யும் ரகசியங்கள நூலினை உருவாக்கக்கருவாக அமைந்து , என்னை உங்களிடம் அர்பணித்த, நற்குணத்தார் போற்றும் , கற்பகம் புத்தகாலயம்' உரிமையாளர் திருமிகு.இராம நல்லதம்பி அவர்களுக்கு ஈடற்ற நன்றியினை உரித்தாக்குவது மிகையாகாது.
- பதிபகத்தார்.