வியாபாரம் விருத்தியடைய எதிரிகளின் சூழ்ச்சி, இடையூறுகளை மீறி வாடிக்கையாளர் தமது கடையை நோக்கிப் படையெடுக்கச் செய்ய சிவ சம்புவராகி இயந்திரத்தை தயார் செய்து பூஜையில் வைத்து வழிபட வேண்டும். செம்பு, வெள்ளி அல்லது பஞ்சலோகத்தில் ஆன ஏதாவது ஒரு தகட்டில் யந்திர உருவத்தைத் தெளிவாக வரைந்து கொள்ள வேண்டும். வழக்கமான முறைப்படி நிவேதனப் பொருள்களை தயார்செய்து பூஜை செய்யும் இடம் நன்கு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கோலமிட்ட இடத்தில் ஒரு பீடத்தின் மீது யந்திரத்தை வைக்க வேண்டும். பிறகு தூப துபம் காண்பித்து பூஜையைத் தொடங்க வேண்டும். அர்ச்சனை செய்வதற்கு செவ்வரளிப் பூவைப் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.