பிரபஞ்சம் என்றால் என்ன ? இந்தப் பிரபஞ்சத்தில் நாம் யார்? அணு என்பது எது? அண்டம் எதனால் ஆனது. என்பன போன்ற
பல கேள்விகளின் பதிலாகவும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியும் பெட்டகமாகவும், இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எவ்வாறு வெற்றி பெறலாம் என்கிற அடிப்படையில் வெற்றி தரும் பிரபஞ்சண தியானம்' என்னும் நூலினைப் படைத்துள்ளார் நண்பர் கொளஞ்சிநாதன். மனிதனின் தோற்றம், மனித வாழ்க்கையின் செயல்பாடுகள், தியானம், பகவத்கீதை தியானம், சித்தர்கள் கூறும் நியான விளக்கம், திருமந்திமும் தியானமும், பிரார்த்தனையைப் பற்றியும் அதன் வலிமையைப் ப்ற்றியும் மந்திர ஒலியால் மனதில் ஏற்படும் ஒளியைப் பற்றியும் மிக ஆழமாகவும் எழுதியிருக்கிறார் இப்புத்தகத்தில் நூலாசிரியர்.
- பா . விஜய்.