நியே என் இதயமடி' கரையைத் தேடும் கடலைகள் ; என்ற இரு நாவல்கள் அடங்கிய தொகுப்பாகும். இந்நாவல்களில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள், உறவுகளால், நட்புகளால், ஒரு கட்டத்தில் புறக் கணிக்கப்பட்டவர்கள். விருப்பு வெறுப்பின்றி,வறுமையை வாழ்வில் ஒரு அங்கம் என ஆக்கிக் கொண்டார்கள். வாழ்க்கை ,ஒரு புதிரான ஒன்று, இப்புதிரை முழுவதுமாய் புரிந்துகொள்வதற்குள்,விடையை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்குள் வாழ்க்கை பாதி கடந்து விடுகின்றது. இப்படிப்பட்ட வாழ்க்கையில், துயரங்களின் கால் தடங்களில் மட்டும் கால்பதிக்க நடந்தவர்களுக்கு சூழ்நிலைகள் கைகோத்துக் கொண்டு,இன்பம் அரவணைத்துக் கொள்கிறதா,இல்லை பழைய பாதையே தொடர்கிறதா என்பதை இந்நாவல்களைப் படித்து தெரிந்து கொள்க.