சைவ அடியார்களுள் இடம்பெற்றிருக்கும் பெண் அடியார்களுள் குறிப்பிடத்தக்கவர் காரைக்கால் அம்மையார். இவரது இயற்பெயர் புனிதவதி. சோழநாட்டில் இடம்பெற்றிருந்த காரைக்காலில் பிறந்தவர். அடியார் வழிபாட்டில் சிறந்திருந்த இவர் பங்குனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வணிகர் குலத்தில் அவதரித்தார். காரைக்கா லம்மையார் பெண் அடியார்களுள் சிறந்து விளங்கி தன்மையினையும், அவர் இறைவன்மேல் கொண்ட பற்றினால் படைத்து வழங்கிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியன இறைப்பற்றினை விளக்குவனவாக உள்ளன. காரைக்காலம்மையாரின் புராண வரலாற் றோடு அவரது படைப்புகளில் இடம் பெற்றிருக்கும் பக்திச் சிறப்புகளை வெளிக் கொணர்வதும், படைப்புகளுக்கு எளிய உரை வழங்குவதும் இந்நூலின் நோக்கமாகும்.