ஒரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், வளமை, ஆன்மீக நிலை ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில் கோயில்கள் அமைந்துள்ளன. அக்காலத்தில் ஒப்புயர்வற்ற பாதுகாப்புப் பெட்டகமாகவும், கோயில்கள் திகந்தன. மன்னர் அறுவடை இல்லாத காலங்களிலும் வறட்சி நாட்களிலும் சிற்பக்கலைக்கும் மக்களின் உழைப்பினைப் பயன்படுத்திக் கொண்டார். அதற்கு ஊதியமாக அரசாங்கத் தானியக்கிடங்கில் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டு அதன்மூலம் வறட்சியைச் சமாளித்தனர். இன்றைக்கும் கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுகின்றது.