ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வுகள் பொதுவானவை. ஏதேனும் ஒரு கணத்திலிருந்து தொலைந்து போக எல்லோருக்கும் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. சிலருக்குப் பயணம், சிலருக்குத் தாய்மடி, சிலருக்குத் தோழமையின் தோள், சிலருக்கு வாசிப்பு. இவை உணர்வுகளின் கதைகள். பால்யத்தின் காதலை மறக்க முடியாமல், ஒரு தருணத்தில் சந்தித்துவிடும் காதலர்களுக்குப் பால் பேதம் இல்லை. தாய்க்கு மட்டுமல்ல மகனிடத்திலும் தாய்மை உண்டு என்கிறது ஒரு கதை. கண்டிப்பு என்ற பெயரால் தன் சேய்க்கு பேயாய் மாறுகிறாள் ஒரு தாய். உணர்வுகளைப் பரிமாறும் வரிகளைக் கதை என்றும் அழைக்கலாம் என்றால் இவை கதைகளே.