கர்ப்பத்தினாலும், பிள்ளைகளைப் பெறுவதனாலும் பெண்களுக்கு ஏற்படும்
கஷ்டங்களையும், அடிமைத்தனங்களையும் எடுத்துக் காட்டவும், மற்றும் பிள்ளைகளை
அதிகமாகப் பெறுவதனால் ஆண்
பெண் இவர்களுக்குள்ள கஷ்டங்களையும் எடுத்துக்காட்டுவதுடன், பெண்கள் நலத்துக்கு
ஆண்களால் ஆண்கள் முயற்சியால் ஒரு நாளும் நன்மை ஏற்பட்டுவிடாது என்றும்.
பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக
நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும்
ஆண்களுக்குச் சமமானவர்கள் என்றும், எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல
என்றும் கருதிக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பாடுபட வேண்டும் என்பதை
வலியுறுத்தவே எழுதப்பட்டது இந்நூல்.