அரவப்பட்டு என்று பெயர் கொண்ட அந்தச் சின்னஞ்சிறு கிராமாம் நான்கே வீதிகளைக் கொண்டதுதான். ஆனால் அந்த ஊரில் நடுவே அமைந்திருக்கும் அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.சித்ரா பௌர்ணமில் அந்த அம்மனுக்கு நடக்கும் திருவிழாவைக் காண சுற்றியுள்ள கிராமங்களிலிருந்ததெல்லாம் திரள் திரளாக மக்கள் வருவார்கள். அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டவர்கள் காணிக்கைகளைச் செலுத்தி அம்மனை வழிபடுவார்கள்.