திருநெல்வேலியை எத்தனை பேர் ஆய்வு செய்தாலும் மீண்டும் மீண்டும் அதில் சொல்லப்படாத இன்னும் நிறைய செய்திகள் இருந்துகொண்டே இருக்கின்றன. இத்தொகுப்பில் மொத்தம் 32 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை பற்றி பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் எழுதிய கட்டுரையிலிருந்து பல துல்லிய செய்திகளுடன் தொடங்கும் இத்தொகுப்பு படிக்கப் படிக்க நெல்லை மீதான புரிதலையும் இதை இன்னும் தேடவேண்டும் என்ற உந்துதலையும் தரத்தக்கதாக இருக்கிறது. இப்புத்தகம் திருநெல்வேலிக்காரர்களுக்கு மட்டுமல்ல, திருநெல்வேலியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஒரு ஊரை எவ்வளவு ஆழமாகப் பார்க்கலாம் என அறிந்து கொள்வதற்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். மயன் ரமேஷ் ராஜா.