இங்கே இடம் பெற்றுள்ள கட்டுரைகள் எல்லாம் சமயங்கள், சமயப் பிரதிகள், சமய
ஆளுமைகள். சமயச் சண்டைகளைப் பற்றியது. ஆறுமுக நாவலரின் கிறிஸ்தவ
மதப்பரப்பாளர்களுக்கு எதிரான கண்டன எழுத்துக்கள், வீரமாமுனிவரும் சீகன்
பால்கும் கிறிஸ்தவ தமிழ் வேதத்துக்காக மேற்கொண்ட சமர்கள், ராஜா ராம் மோகன்
ராய் நான்கு சுவிஷேச புத்தகங்களைச் சுருக்கிவெளியிட்ட ‘இயேசுவின்
அறிவுறுத்தல்கள்’. இதனால் ஏற்பட்ட இறையில் விவாதங்கள்; திருமறைத்
திருப்புதலில் ஏற்படும் சிக்கல்களைத் இத் தொகுதி பாண்டியதுடனும்
பரிகாசத்துடனும் பதிவு செய்கிறது. இந்த நிகழ்வுகள் உருவாகிய சரித்திர,
அரசியல், கலாச்சாரப் பின்னணி, மற்றும் இவை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஒரு
கல்வியாளரின் நிபுணத்துவத்துடன் எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் இவரின் எழுத்துக்கள் வாசகர் சினேகமானது. எளிதில் அணுகக்கூடியவை.