மொழியின் பல வேறு பரிமாணங்களை இலக்கிய நோக்கில் இந்தக் கட்டுரைகள் ஓரளவு ஆராய்கின்றன. பொதுவாக இதை மொழியியல் திறனாய்வு என்று அழைக்கலாம். தொல்காப்பியர் இலக்கிய ஆய்வில் மொழிக்குக் கொடுத்த முக்கியத்துவம் இன்று பலராலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. என்றாலும், மொழியியலில் ஏற்பட்ட வியக்கத்குந்த முன்னேற்றம் காரணமாக இலக்கணக் கருத்துகளையும், மொழியியல் கருத்துகளையும் தனியே எடுத்து வளர்க்கவேண்டிய அவசியம் தோன்றியுள்ளது. அதற்கான சில அறிகுறிகள் இந்த நூலில் உள்ளதை வாசகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.