சாதி குறித்து புத்தகம் முழுக்கப் பேசுகிறான். ஆனால் ஒரு இடத்தில்கூட அதை உறுத்தலில்லாமல் கொண்டுபோகிறான். அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடல்கள் குறைந்துபோன காலத்தில் இந்தக் கதைகள் சுகமா இருக்கு. பல கதைகள் குறும்படமாக எடுக்கத் தகுந்தது. நாவல்கள் எழுதக் கூடிய வளம் உன் எழுத்தில் இருக்கு. மண்சார்ந்து இந்தத் தலைமுறையில் எழுதத் துவங்கியிருக்கும் இந்த இளவலை வாழ்த்துகிறேன். - கழனியூரன் (எழுத்தாளர், நாட்டுப்புறவியல் ஆய்வாளர்)