சமகாலச் சூழலில் கலை- இலக்கியம்- கல்வி தொடர்பான ஆழமான விரிவான உரையாடலே இந்தக் கட்டுரைத் தொகுப்பு! சரயான தரவுகளைக் கொண்டு முறையாக ஆராயப்பட்ட இந்தக் கட்டுரைகள் நமக்குப் பல புதிய வெளிச்சங்களைக் காட்டுகின்றன. பாரதிபாலன் அவர்களின் பார்வையும், மொழியும், அதன் வழியாக அவர் கடத்தும் கருத்தாக்கங்களும் தனிக் கவனம் பெறுகின்றன. தினமணி நாளிதழில் இக்கட்டுரைகள் வெளிவந்த காலங்களில் அதிக வரவேற்பைப் பெற்றது. தற்போது தொகுப்பாக வெளிவருவது தனிச் சிறப்பாகும். கல்விப் புலங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கும், அது குறித்து அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கும் இத்தொகுப்பு களஞ்சியமாகத் திகழும்!