நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர், பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கணினித்
துறை பேராசிரியராக பணியாற்றியவர். தமிழ் மீது அதீத பற்று கொண்டவர். ஜே.சி.
அமைப்பின் ‘இளம் எழுத்தாளர்’ விருதினைப் பெற்றவர். டாடா நிறுவனத்தின் 2021
ஆண்டிற்கான ‘தமிழகத்தின் புதுமைப் பெண்’ விருதினைப் பெற்றவர். தற்போது சமூக
ஆர்வலராகவும், மாணவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சிப் பட்டறையின்
தலைவராகவும் திகழ்கிறார். நெல்லை வட்டார வழக்கில் எழுதுவதில் மிகவும்
தேர்ந்தவர். இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் கவிதைகள், கட்டுரைகள்
எழுதி வருகிறார்.