வேணு சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் சென்னை, கல்பாக்கம்
மருத்துவமனையில் தொழில்நுட்ப ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது பல
மருத்துவக் கட்டுரைகள் தமிழில் வெளிவரும் பல மருத்துவ இதழ்களில்
வெளிவந்திருக்கின்றன. குழந்தை வளர்ப்பு, பெண்கள் உடல்நலம், சிறுவர்
இலக்கியம், ஆன்மீகம், அறிவியல் போன்ற துறைகளில் பல நூல்களை எழுதி
இருக்கிறார். இவர் எழுதிய “சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும்,
விழிப்புணர்வும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின்
சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்று இருக்கிறது.