சமஸ்கிருத இலக்கியத்தில் மகாகவியாகவும் மகாகாவிய கர்த்தாவாகவும் போற்றப்படும் காளிதாசன், சாகுந்தலம்
என்ற நாடகக் காவியத்தின் மூலம்தான் மகத்தானவராகக் கருதப்படுகிறார்.
அவருக்குக் காலத்தால் முற்பட்ட பாஸ மகாகவி (Bhāsa), சமஸ்கிருத நாடக இலக்கிய
உலகத்தில் காளிதாசனுக்கு இணையாகக் குறிப்பிடப்படுகிறார். பாணினி
இலக்கணத்துக்கும் பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்கும் காளிதாசன்
கட்டுப்பட்டவர். ஆனால் பாஸன் இவர்களுக்கும் முந்தியவர் என்பதால், அவர்களது
இலக்கண வரையறைகளிடமிருந்து விடுபட்டவராகத் திகழ்கிறார்.