எங்கெல்லாம் உண்மையும், சத்தியமும் நிற்கிறதோ அங்கே காந்தி வாழ்கிறார். எங்கே அன்பும் அரவணைப்பும் நிலவுகிறதோ அங்கே காந்தி உரைகிறார். எங்கெல்லாம் நல்லது துளிர்க்கிறதோ அங்கே காந்தி நடமாடுகிறார்.
- முனைவர் அ. பிச்சை
உற்றுப் பார்த்தால் ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊருக்கான காந்தி இருப்பார்! நம் கிராமங்கள் அனைத்திலும் ஒரு காந்தியைக் காண முடியும். காந்தியம் இந்த மண்ணில் விதை போலக் கலந்திருக்கிறது. எங்கெல்லாம் சிறு முயற்சியில் ஈரம் படிகிறதோ, அங்கெல்லாம் காந்தியம் முளைத்தெழும்
- ஜெயகாந்தன்
மரணத்திற்கு மத்தியிலும், வாழ்க்கை தொடர்கிறது, பொய்மைக்கு மத்தியிலும், சத்தியம் நிலைக்கிறது, இருளுக்கு மத்தியிலும், ஒளி பிரகாசிக்கிறது
(In the midst of death, life persists; In the midst of untruth, truth persists, In the midst of darkness, light persists)
- அண்ணல் காந்தியடிகள்
காந்திக்கு சாவே கிடையாது, மகாத்மாவுக்கு மரணம் இல்லை, இது சத்தியவாக்கு.