ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறைக்கு நிகரானது என்று பெயர்பெற்ற தமிழக காவல்துறைக்கு சவாலான நேரம் அது. தமிழ்நாடு முதல்வரும் பாரதப் பிரதமரும் கலந்துகொள்ளும் உலக சதுரங்கப் போட்டி என்ற சரித்திர நிகழ்விற்கு முன்பாக சில சோதனைகள் சென்னையில் ஏற்படுகின்றன. தமிழகக் காவல்துறை உயரதிகாரி ஒருவர் சதிகளை முறியடிக்கப் போராடுகிறார். பத்தாம் வகுப்பில் படிக்கும் அவரது மகளான அபிதாவும் களமிறங்குகிறாள். தமிழ்நாடு காவல்துறையின் மாண்பு மீட்கப்பட்டதா?