இந்தியாவில் பிறந்து வளர்ந்த இருமொழி எழுத்தாளர். ஓய்வு பெற்ற பௌதிக ஆசிரியை.
1967 தொடக்கம் மலேசியாவில் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், கலை விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. இவர் ஆங்கிலத்தில் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள் ஸ்வீடனிலும் மலேசியாவிலும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கையாளப்பட்டிருக்கின்றன.
பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகளை அலசி, தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டிருக்கிறார். வெளியிட்ட சிறுகதைத்தொகுப்பு: ஏணி. (தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டது). நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை கர்னாடக இசைப்பாணியில் எழுதி, பாடிப் பதிவு செய்துள்ளார்.